நற்றிணை - 8. குறிஞ்சி
ADVERTISEMENTS
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மிக்க துன்பமுழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும்; பலவாகிய பூக்களுடனே மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்; அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ் விளமகள்; யாவர் புதல்வியோ?; அசையாத உள்ளத்தையுடைய எம்மையே துயரஞ் செய்தனள்!; இத்திறம் வல்லவளைப்பெற்று எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்வானாக!; இவளை ஈன்ற தாயும்; அகன்ற வயலின்கண்ணே மள்ளரால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போராற் கொண்டுவரப்பட்டும் தண்ணிய சேறு பரந்து; அழகினையும் வலிய தண்டினையுமுடைய கண்போன்ற நெய்தல் நெற்போரின்கண்ணே மலரும்; திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக!;
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை
ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது.
ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது.