ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 61. குறிஞ்சி

ADVERTISEMENTS

கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
'படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


ஏடி தோழீ ! யான் கூறுகின்ற இதனைச் கேட்பாயாக ! நேற்றிரவில் வேட்கை மிகுதியாலுற்ற ஆசைப்பெருக்கமானது துன்புறுத்தலாலே வெப்பமாகப் பெருமூச்செறிந்து; அம்புபட்ட மான்பிணைபோல வருத்த முற்றேனாக; அப்பொழுது அன்னை யானுற்ற துன்ப மிகுதியை அறிந்தாள் போல என்னை நோக்கி 'என்னிள மகளே ! நீ தூங்குவாயல்லையோ என்றலும்; யான் சொல்வது வெளியிலே தெரியாதபடி மெல்ல என் நெஞ்சினுள்ளே; மிக்க மழை பொழிந்த கற்பாறை யருகிலே பூத்த சிச்சிலிப் பறவையின் வாய் போன்ற அரும்புகளையுடைய முல்லையும் பரல்கள் நிரம்பிய பள்ளங்களும் உடைய (விளங்கிய) காடு சூழ்ந்த நாட்டையுடைய தலைமகனைக் கருதியிருப்போர்க்குக் கண்ணுறக்கமும் வாரா நிற்குமோ ? என்றேன் காண்;

தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச்
சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

சிறுமோலிகனார்