நற்றிணை - 20. மருதம்
ADVERTISEMENTS
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடப்ப மரத்தின்¢விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து வீழ்ந்து அசையா நிற்ப; இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப; நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நிலைபெயர்ந்து சுழலும்படி நோக்கி எமது மறுகின்கட் சென்றனள்; நின்னைப் பிரிதலாலே விளங்கிய பூண்களுடனே நுண்ணிய பலவாய சுணங்கு அணியப் பெற்றவளாய்; முன்பு நின் மார்பினுற்ற முயக்கத்தில் நெரிந்த சோர்கின்ற குழையையும்; நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும்; துவண்ட மாலையையுமுடைய கொடிபோன்று நின் முயக்கம் நீங்கினவளாகி எமது மறுகின்கட் சென்றனள்; அத்தகைய இளம் பிராயத்தளாகிய பரத்தையை யாம் கண்டேம்; அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக;
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும்
அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க
தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.
அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க
தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.
ஓரம்போகியார்