நற்றிணை - 299. நெய்தல்
ADVERTISEMENTS
உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ-
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அச்சத்தைச் செய்கின்ற யானை நல்ல ஆடையை அணிந்து கொண்டாற் போன்ற; நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதரில்; இயங்குகின்ற கடிய மேல் காற்று மோதுதலாலே நுண்ணிய மலரில் உள்ள தாதுக்கள் வயங்கிய கலன் அணிந்த மகளிருடைய வளைகள் உடைந்து உதிர்ந்தாற்போல உதிர்ந்து பரவாநிற்கும்; அழகிய கடற்கரையிலுள்ள சிறிய நம்மூர் வருத்தமுறுவதாயினும்; அச் சேர்ப்பரே நந் தலைவர் காண்; வில்லால் அடிபட்ட பஞ்சுபோல நிரம்பிய அலைகளிலே காற்று மோதுதலால் வயங்கிய பிசிர்கள் மிகுகின்ற நெருங்கிய கடற்கரையின் தலைவராகிய அச் சேர்ப்பரொடு; மகிழ்ந்து கூடாத நாளில் நாம் இருந்தும் இல்லாதேம் போல ஆதலை அறியா நின்றோமன்றே? அங்ஙனம் ஆகியும் இப்பொழுது அவர் தொடர்பு கழிந்தது கண்டாய்; இஃதென்ன இன்னாமையுடையது?
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்