நற்றிணை - 273. குறிஞ்சி
ADVERTISEMENTS
இஃது எவன்கொல்லோ- தோழி!- மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தோழீ! நின் உடம்பெங்கும் பரந்து துன்பமிக்கு மயங்கிய துயரத்தை நோக்கி; நம்பாலுள்ள விருப்பத்தாலே தானும் வருத்தமுற்று நம்மிடத்தில் நிகழ்ந்தது அறியாது முருகவேளுக்கு வெறியெடுத்த நம் அன்னையை நோக்கி; இது முருகணங்கு என்று வேலன் கூறாநிற்கும் என்பர்; ஆதலின் நிறமிக்க பெரிய யானை நீர்முகந்து கொள்கின்ற நெடிய சுனையின் கண்ணே அமைந்து; நீண்டுற்று என் கண்போல்கின்ற நீலமலர்; தண்ணியவாய் மணமிகும் மலைநாடனை நினைக்குந்தோறும்; அவன் இயல்பாகத் தந்த கவலையானது எனது நெஞ்சை நடுங்கச் செய்யாநின்றது; இஃது இனி எப்படியாகி முடியுமோ?
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு
உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி
வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.
உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி
வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.
மதுரை இளம்பாலாசிரியன்
சேந்தன் கூத்தனார்
சேந்தன் கூத்தனார்