நற்றிணை - 19. நெய்தல்
ADVERTISEMENTS
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
இறாமீனின் புறம் போன்ற சருச்சரை பொருந்திய பெரிய அடியையுடைய சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையுடைய இலையையுடைய தாழையானது, பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு பெரிய களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு முதிர்ந்து; நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத்தோன்றி; விழாவெடுக்கும் களமெல்லாம் கமழா நிற்கும் வலியநீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!; மிக்க மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன் செலுத்தலாலே நின்னூர்க்குச் செல்லும் பொருட்டுப் போகாநின்றனை யாதலால், வருவையாகிய சின்னாள் பின்பு நீ வருவாய் என்று குறிப்பிட்ட சிலநாளளவும்; இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக!
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு
கடாயது.
கடாயது.
நக்கண்ணையார்