நற்றிணை - 24. பாலை
ADVERTISEMENTS
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்
சேறும், நாம்' எனச் சொல்ல- சேயிழை!-
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
சேயிழாய்!; நிலம் பிளவுபடுமாறு இறங்கிய வேரும் பெரிய கிளைகளும்; அடியில் உடும்புகள் செறிந்தாற்போன்ற பொரிந்த செதில்களும் உடைய நெடிய விளாமரத்தின்; கிளையில் மூக்கு ஊழ்த்து விழுந்து கம்பலத்தை விரித்தாலொத்த பசிய பயிரின் கண்ணே ஆடுதலொழிந்த பந்து கிடப்பது போலப் பரவியிருக்கும்; அவ்விளாம்பழங்களையே உணவாகவுடைய அயனாட்டிலே செல்லுதற்கரிய பாலைவழியில்; யாம் செல்லா நிற்பேமென்று தலைவர் கூறலும்; அது நல்லதொரு காரியமென்று விருப்பத்தோடு கூறினை! ஆதலின் நீ நல்லதொன்றனைச் செய்தனைகாண்!; ஆடவர் வினைமேற்கொண்ட உள்ளத்தராய்ப் பொருளீட்டுதற்கு அகலா நிற்பர்; அங்ஙனம் அவர் அகலும்பொழுது மறுத்துக் கூறாமல் உடன்படுவதே அதற்குரிய பண்பாகும்.
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி
உவந்து கூறியது.
உவந்து கூறியது.
கணக்காயனார்