ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 187. நெய்தல்

ADVERTISEMENTS

நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே- தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


நெஞ்சமே! நெய்தலின் மலர் குவிய நிழல்களெல்லாம் கீழைத்திசையைச் சென்றடைய மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றைச் சென்று புகுகின்ற ஆதித்த மண்டிலம் சிவந்த நிறமுற்று நிலத்தின் கண்ணே தான் காட்டிய கொடுமை முற்றும் தணியாநிற்ப; பலவாய மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் தன் தோற்றப் பொலிவு குறைவதா யிராநின்றதுமன்; இப்பொழுது உடம்பில் மலியப்பெற்ற காமத்தையுடைய யாம் அக் காமத்தைத் தணிக்கும் வகையைப் பெறாது பின்னே நின்று தொழுது ஒழியும்படி; பொழுது படலும் மணியினம் ஒலிப்பக் குதிரைகளைப் பூட்டப்பட்டுத் தேரானது தான் செல்லுகின்ற புறமும் மறையாநிற்கும்; ஆதலால் இவ்வூருடனே; தேனைப் பொருந்த வுண்ணுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையணிந்த மார்பின்கண்ணே மின்னுதல் பொருந்திய வளைந்த கலன்களையுடைய கொண்கனும்; நாமும் இனிய உவகை பொருந்த முயங்கி விளையாடிய சோலையானது நமக்கு எவ்வண்ணமாக அமையப்படுவதாமோ? அறிகிலேன்;

தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு
நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.

அவ்வையார்